செய்திகள்
அமைச்சர் பொன்முடி

தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி தகவல்

Published On 2021-09-09 08:52 GMT   |   Update On 2021-09-09 08:52 GMT
தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்க உத்தரவிடப்பட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை:

சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

பிளஸ்-2 ஆல்-பாஸ் அறிவித்ததால் தேர்ச்சி சதவீதம் அதிகம் என்பதால் கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.


இப்போது கூடுதலாக 15 சதவீத இடங்களை அதிகரிக்க தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News