செய்திகள்
3 நாள் பயணமாக புதுவைக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்
துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு 3 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்.
அன்று புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரிய ஓளி மின் பயன்பாடு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். இதனையடுத்து, புதுவை கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள் (13-ந் தேதி) காலை புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார்.
துணை ஜனாதிபதியின் புதுவை வருகை உறுதியாகி உள்ள சூழலில் அரசு தரப்பில் முறைப்படி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.
புதுவைக்கு 3 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்.
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார்.
தொடர்ந்து, புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். இதனையடுத்து, புதுவை கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள் (13-ந் தேதி) காலை புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஓளி மின்பயன்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். 14-ந் தேதி புதுவையில் இருந்து புறப்படுகிறார்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... உலக அளவில் கொரோனா பரவல் மந்தம்