செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1½ கிலோ தங்க நகைகள் பறிமுதல்

Published On 2021-09-08 14:47 IST   |   Update On 2021-09-08 14:47:00 IST
மயிலாடுதுறை ரெயில்வே ஸ்டேசனில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1½ கிலோ தங்க நகைகளை பயணியிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:

சென்னை-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை ஸ்டேசனுக்கு வந்தபோது ரெயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் சுமார் ஒன்றரை கிலோ மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான நகை என்பதும், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதியில் விற்க எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சென்னையிலிருந்து ரமேசை வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவலறிந்த வணிக வரித்துறை அலுவலர்களும் ரமேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News