செய்திகள்
தாக்குதல்

செங்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய ரவுடி கைது

Published On 2021-09-05 09:22 GMT   |   Update On 2021-09-05 09:22 GMT
செங்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது42). இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் வல்லத்தை சேர்ந்த சுடலை (37) என்பவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக ஆனந்த் வேலைக்கு செல்லவில்லை. இதற்கு காரணம் காளிதாஸ் தான் என்று எண்ணிய சுடலை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது சுடலை மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், பாலகன் ஆகியோர் சேர்ந்து காளிதாசை தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் பாலகனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுடலையின் பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News