செய்திகள்
நாமக்கல்லில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாமக்கல்:
இந்நிலையில் பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை திறக்க அரசு அனுமதியளித்தது. இதையடுத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்று உறுதியான மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை- கலெக்டர் உத்தரவு