செய்திகள்
மின்சார ரெயில்

சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் தளர்வுகள் அறிவிப்பு

Published On 2021-09-02 18:18 GMT   |   Update On 2021-09-02 18:18 GMT
சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததைத் தொடர்ந்து மின்சார ரெயிலில் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், 12 வயதுக்கு உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்து இருந்தது.

இந்நிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Tags:    

Similar News