செய்திகள்
கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்பூர் :
தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பூர் மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் குமரன் பெண்கள் கல்லூரியில் இன்று மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இதில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதேப்போல் மாவட்டம் முழுவதும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்த அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.