செய்திகள்
சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
பாளை அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள புகழேந்தி நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ்லூயிஸ் (வயது59), தொழிலாளி.
இவர் கடந்த 24-ந்தேதி அதே பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.
பின்னர் அவருக்கு மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளை அருகே உள்ள புகழேந்தி நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ்லூயிஸ் (வயது59), தொழிலாளி.
இவர் கடந்த 24-ந்தேதி அதே பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.
பின்னர் அவருக்கு மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.