செய்திகள்
நகை கொள்ளை

விவசாயி-தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2021-09-02 10:27 GMT   |   Update On 2021-09-02 10:27 GMT
திருமங்கலம், செல்லூரில் விவசாயி மற்றும் தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமம் டி.குன்னத்தூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 2 ஆயிரம் ரொக்கம், கிரெடிட் கார்டு, சி.சி.டி.வி. கேமரா 2, எல்.இ.டி. பல்பு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை செல்லூர் அய்யனார் காலனி தெருவை சேர்ந்தவர் சின்ன பாண்டியராஜன் (வயது 42). மண்பாண்ட தொழிலாளி.

சின்ன பாண்டியராஜன் சம்பவத்தன்று இரவு தூங்கும் முன்பாக முன்கதவை பூட்ட மறந்து விட்டார்.

அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது தொடர்பாக சின்ன பாண்டியராஜன் செல்லூர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News