செய்திகள்
சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே போல் பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் மாணவியின் தாய்க்கு சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு அளித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் சாதனை