செய்திகள்
கோவை மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் 461 பேர் மீது வழக்கு
கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு சுங்கம் பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோவை மாநகரில் 20 இடங்களில் அ.தி.மு.க. வினர் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு சுங்கம் பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 22 பேர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி சந்திப்பில் பூமார்க்கெட் பகுதி செயலாளர் இலைக்கடை ஜெயபால் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் கலந்து கொண்டனர்.
தேர்நிலை திடலில் உக்கடம் பகுதி செயலாளர் கணேசன் தலைமையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் கலந்து கொண்டனர். காந்திபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 16 பேர் கலந்து கொண்டனர். காய்கடை மைதானத்தில் தம்பு என்கிற மவுனசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 24 பேர் கலந்து கொண்டனர். தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் பங்கேற்றனர். சங்கனூர் ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 15 பேர் பங்கேற்றனர். புலியகுளம் பங்கஜா மில்ரோட்டில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கலந்து கொண்டனர்.
செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 22 பேர் பங்கேற்றனர். நஞ்சுண்டாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 9 பெண்கள் உள்பட 32 பேர் பங்கேற்றனர். சாரதா மில் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் பங்கேற்றனர். குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். மாச்சாம்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 40 பேர் பங்கேற்றனர். கோவைப்புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 35 பேர் கலந்து கொண்டனர்.
சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 6 பெண்கள் உள்பட 18 பேர் பங்கேற்றனர். திருச்சி ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் பங்கேற்றனர். பீளமேடு ஆர்.கே. மில் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 48 பேர் கலந்து கொண்டனர். பி.ஆர்.புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 36 பேர் பங்கேற்றனர்.
கணபதி பஸ் நிலையத்தில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் கலந்து கொண்டனர். மணியக்காரம் பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 31 பேர் பங்கேற்றனர்.
மொத்தமாக கோவை மாநகரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 461 பேர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார் 144 தடை உத்தரைவை மீறுதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், தொற்று நோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 461 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோவை மாநகரில் 20 இடங்களில் அ.தி.மு.க. வினர் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு சுங்கம் பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 22 பேர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி சந்திப்பில் பூமார்க்கெட் பகுதி செயலாளர் இலைக்கடை ஜெயபால் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் கலந்து கொண்டனர்.
தேர்நிலை திடலில் உக்கடம் பகுதி செயலாளர் கணேசன் தலைமையில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் கலந்து கொண்டனர். காந்திபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 16 பேர் கலந்து கொண்டனர். காய்கடை மைதானத்தில் தம்பு என்கிற மவுனசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 24 பேர் கலந்து கொண்டனர். தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 12 பேர் பங்கேற்றனர். சங்கனூர் ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 15 பேர் பங்கேற்றனர். புலியகுளம் பங்கஜா மில்ரோட்டில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கலந்து கொண்டனர்.
செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 22 பேர் பங்கேற்றனர். நஞ்சுண்டாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 9 பெண்கள் உள்பட 32 பேர் பங்கேற்றனர். சாரதா மில் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் பங்கேற்றனர். குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். மாச்சாம்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 40 பேர் பங்கேற்றனர். கோவைப்புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 35 பேர் கலந்து கொண்டனர்.
சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 6 பெண்கள் உள்பட 18 பேர் பங்கேற்றனர். திருச்சி ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் பங்கேற்றனர். பீளமேடு ஆர்.கே. மில் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 48 பேர் கலந்து கொண்டனர். பி.ஆர்.புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 36 பேர் பங்கேற்றனர்.
கணபதி பஸ் நிலையத்தில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் கலந்து கொண்டனர். மணியக்காரம் பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 31 பேர் பங்கேற்றனர்.
மொத்தமாக கோவை மாநகரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 461 பேர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார் 144 தடை உத்தரைவை மீறுதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், தொற்று நோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 461 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.