செய்திகள்
நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை
நெல்லை அருகே நகை-பணத்துடன் இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பேட்டை வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆத்தி மணி. இவரது மகள் சுமதி (வயது 24). ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் 11 பவுன் நகை மற்றும் ரூ.4,500 ரொக்க பணத்துடன் மாயமானார். அவரை அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஆத்திமணி பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுமதியை தேடி வருகின்றனர்.
பேட்டை வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆத்தி மணி. இவரது மகள் சுமதி (வயது 24). ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் 11 பவுன் நகை மற்றும் ரூ.4,500 ரொக்க பணத்துடன் மாயமானார். அவரை அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஆத்திமணி பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுமதியை தேடி வருகின்றனர்.