செய்திகள்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது
ஒரே நாளில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குழித்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இன்று அதிகாலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த டாரஸ் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 15.7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
லாரியை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது30) மற்றும் அழகிய மண்டபத்தை அடுத்த கல்லுவிளையை சேர்ந்த சுனில் (39) ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது அந்த ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து டாரஸ் லாரி மற்றும் 15.7 டன் ரேஷன் அரசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநர்கள் ராஜேஷ் குமார் மற்றும் சுனிலையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை முஞ்சிறையை அடுத்த காப்புக் காடு குடோனிலும், லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் படந்தாலுமூடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
லாரியில் 11 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை ஓட்டி வந்த அதங்கோடு பகுதியை சேர்ந்த அனீஸ் (26) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டு குமரி - கேரளா எல்லை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக் காடு குடோனிலும், பறிமுதல் செய்யப்பட்ட லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குழித்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இன்று அதிகாலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த டாரஸ் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 15.7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
லாரியை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது30) மற்றும் அழகிய மண்டபத்தை அடுத்த கல்லுவிளையை சேர்ந்த சுனில் (39) ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது அந்த ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து டாரஸ் லாரி மற்றும் 15.7 டன் ரேஷன் அரசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநர்கள் ராஜேஷ் குமார் மற்றும் சுனிலையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை முஞ்சிறையை அடுத்த காப்புக் காடு குடோனிலும், லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் படந்தாலுமூடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
லாரியில் 11 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை ஓட்டி வந்த அதங்கோடு பகுதியை சேர்ந்த அனீஸ் (26) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டு குமரி - கேரளா எல்லை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக் காடு குடோனிலும், பறிமுதல் செய்யப்பட்ட லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குழித்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.