செய்திகள்
முசிறி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி
முசிறி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறி அடுத்த வடக்கு சொரியம் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மூத்த மகள் திரிஷா (வயது 7) இவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தோட்டத்து கிணற்றுக்கு குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.