செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட பஸ்சையும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைப்பதையும் படத்தில் காணலாம்.

திருப்பூர் அருகே ஓடும் பஸ்சில் தீ - பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2021-08-27 12:42 GMT   |   Update On 2021-08-27 12:42 GMT
தாராபுரம் தாலுகா அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் போது திடீரென பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.
தாராபுரம் :
 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கரூர் நோக்கி இன்று காலை தனியார் பஸ் சென்றது. பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 
தாராபுரம் தாலுகா அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் போது  திடீரென பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.

பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென்று பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்துக்கொண்டு ஓடினர். மேலும் பஸ்சில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.

இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Tags:    

Similar News