செய்திகள்
தற்கொலை

மனைவி போலீசில் புகார்: கள்ளக்காதலி பிரிந்துசென்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2021-08-27 10:31 GMT   |   Update On 2021-08-27 10:31 GMT
மனைவி போலீசில் புகார் அளித்ததன் காரணமாக கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போரூர்:

கொருக்குப்பேட்டை டி.கே கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). அதே பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா.

சுரேசுக்கும் உடன் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கணவரின் கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்ததும் சுரேசை மனைவி கவிதா கண்டித்தார்.

இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சுரேஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தனது கள்ளக்காதலியுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார்.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கவிதா கடந்த வாரம் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது இனிமேல் சுரேசுடன் தொடர்பில் இருக்கமாட்டேன் என்று போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சுரேசை பிரிந்து அவரது காதலி குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஆசை கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனமுடைந்த சுரேஷ் நேற்று இரவு பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இந்த நிலையில் கணவரை தேடி வடபழனி வீட்டிற்கு கவிதா வந்த போது கணவர் சுரேஷ் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்ததும் வடபழனி போலீசார் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News