செய்திகள்
விபத்து

கங்கை கொண்டான் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

Published On 2021-08-25 09:31 GMT   |   Update On 2021-08-25 09:31 GMT
கங்கை கொண்டான் அருகே நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:

பாளை அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் முத்து (வயது 50). இவர் கங்கை கொண்டான் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

கங்கை கொண்டான் அருகே வந்த போது நிலை தடுமாறி முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News