செய்திகள்
நகைக்கடையில் பற்றி எரியும் தீ

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் தீ விபத்து

Published On 2021-08-23 12:11 GMT   |   Update On 2021-08-23 13:21 GMT
பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முதல் தளமும், பணியாளர்கள் தங்கியிருந்த இரண்டாம் தளமும் தீயில் எரிந்துள்ளது.
சென்னை:

சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் மளமளவென கடை முழுவதும் பரவியது. கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். 

தீ விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராயபுரம், வண்ணாரப்பேட்டை, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட 4 இடங்களிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். 

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முதல் தளமும், பணியாளர்கள் தங்கியிருந்த இரண்டாம் தளமும் தீயில் எரிந்துள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின.
Tags:    

Similar News