செய்திகள்
சிவசங்கர் பாபா

ஆண்மை இல்லை என கூறி ஜாமீன் பெற முயன்ற சிவசங்கர் பாபா

Published On 2021-08-23 11:18 GMT   |   Update On 2021-08-23 13:15 GMT
சிவசங்கர் பாபாவுக்கு மகன், மகள் இருக்கையில் ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? எனக் கூறிய நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
சென்னை:

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், ஜாமீன் வழங்க இயலாது என நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், சாமியார் சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என்று சிபிசிஐடி விசாரணையின்போது வாக்குமூலம் அளித்ததும், இந்த தகவலைக் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியதும் அம்பலமாகியுள்ளது. 

ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, சிவசங்கர் பாபாவுக்கு ஏற்கனவே ஒரு மகன், ஒரு மகள் இருப்பதையும், அவர்கள் அமெரிக்காவில் வசிப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியது. சிவசங்கர் பாபாவுக்கு மகன், மகள் இருக்கையில் ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? எனக் கூறிய நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. 
Tags:    

Similar News