செய்திகள்
மாணவர்கள்

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? - தமிழக அரசு தகவல்

Published On 2021-08-21 13:42 GMT   |   Update On 2021-08-21 13:42 GMT
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

1-9-2021 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும். 

இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
Tags:    

Similar News