செய்திகள்
விஷம்

விதவைப் பெண்ணை ரகசிய திருமணம் செய்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-08-20 11:00 GMT   |   Update On 2021-08-20 11:00 GMT
கொட்டாரம் அருகே விதவைப் பெண்ணை ரகசிய திருமணம் செய்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் செல்வன் புதூரை சேர்ந்தவர் துரை. இவரது மகன் முத்துசாமி (வயது28).

அதே பகுதியைச் சேர்ந்தவர் மேரி (வயது 31) கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் முத்துசாமிக்கும், மேரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முத்துசாமியின் பெற்றோர் இதனை கண்டித்து உள்ளனர். மேரியும் அந்த ஊரை விட்டு வெளியேறி வெளியூருக்கு சென்று குடியேறப்போவதாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முத்துசாமி தனது வீட்டின் பின்பக்கம் உள்ள தென்னந்தோப்பில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டநிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News