செய்திகள்
கைது

ஜோலார்பேட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2021-08-16 09:40 GMT   |   Update On 2021-08-16 09:40 GMT
ஜோலார்பேட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஜோலார்பேட்டை அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து ஆம்பூர் டவுன் போலீசில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த ஜெகன் குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் இவர் 3 மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான 2 கார்களுக்கு டிரைவராக பணிபுரிந்து வந்தபோது ஒரே நாளில் 2 கார்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News