செய்திகள்
கமல்ஹாசன்

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Published On 2021-08-12 13:50 GMT   |   Update On 2021-08-12 13:50 GMT
திமுக அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில்,

ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக்கட்சித் தலைவர்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? 

கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.



முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக்கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப்  புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News