செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

உள்ளாட்சி தேர்தல்- 2வது நாளாக அதிமுக ஆலோசனை

Published On 2021-08-12 05:51 GMT   |   Update On 2021-08-12 05:51 GMT
விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை:

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.



இன்று நெல்லை மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.


Tags:    

Similar News