செய்திகள்
கைது

உப்புக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-08-07 10:12 GMT   |   Update On 2021-08-07 10:12 GMT
உப்புக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்புக்கோட்டை:

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் உப்புக்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது உப்புக்கோட்டை முல்லைப் பெரியாற்று கரையோர பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அழகுமலை (வயது 31) என்றும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News