செய்திகள்
கோப்புபடம்

கோவையில் 2 முறை காப்பாற்றப்பட்ட பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-08-05 14:39 GMT   |   Update On 2021-08-05 14:39 GMT
கோவையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி திலகவதி (வயது 51). இவர் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் வேலைக்கார பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவர் 2 முறை தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றி விட்டனர்.

சம்பவத்தன்று திலகவதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது காலில் சிறு காயம் இருந்தது. இதனை பார்த்த அவரது கணவர் செல்வகுமார் காயம் எப்படி ஏற்பட்டது என கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த திலகவதி வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வகுமார் தூக்கு கயிற்றில் இருந்து திலகவதியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News