செய்திகள்
திருப்பூரில் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் ஆய்வு
விபத்துக்களை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதுடன் விபத்துக்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உயிர்பலியும் ஏற்படுகிறது- எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர் பகுதியில் எந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அங்கு என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, டி.ஆர்.ஓ.ஜெகநாதன் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள், போக்குவரத்து போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காங்கேயம் ரோடு மற்றும் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினர்.