செய்திகள்
பெண் மாயம்

சங்கரன்கோவிலில் கணவருடன் தகராறில் பெண் மாயம்

Published On 2021-08-03 09:43 GMT   |   Update On 2021-08-03 09:43 GMT
சங்கரன்கோவிலில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரி கடந்த ஒரு மாதமாக வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கோமதியா புரம் தெரு பகுதியை சேர்ந்தவர் சேதுமாதவன். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 42). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறை தொடர்ந்து ஈஸ்வரி கடந்த ஒரு மாதமாக வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை சேது மாதவன், அவரது மகன் பிரபு குமார் ஆகியோர் அப்பகுதியில் தேடி பார்த்தனர். மேலும் அவர்களது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பிரபு குமார் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News