செய்திகள்
தடுப்பூசி

மூன்றாம் பாலினத்தவருக்கு தடுப்பூசி -தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-08-02 15:25 GMT   |   Update On 2021-08-02 15:25 GMT
மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் ரூ.2000 வழங்கிவிட்டதாகவும், இரண்டாவது தவணையும் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:

குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் வழங்கவும், கொரோனா தடுப்பூசி போடவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிவாரணம் வழங்கவும், தடுப்பூசி முகாம் நடத்தவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் ரூ.2000 வழங்கிவிட்டதாகவும், இரண்டாவது தவணையும் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



அதை ஏற்ற நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி போடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

Similar News