செய்திகள்
கொரோனா பரிசோதனை

நேற்றைவிட சற்று குறைவு... தமிழகத்தில் இன்று 1957 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-08-02 15:11 GMT   |   Update On 2021-08-02 15:11 GMT
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 219 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நேற்றைவிட கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 1957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 63 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் பலியாகி உள்ளனர். 2068 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 9 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 219 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றைவிட சற்று அதிகரித்து 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 127, ஈரோட்டில் 168, தஞ்சையில் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News