செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியது

Published On 2021-08-01 12:19 GMT   |   Update On 2021-08-01 12:21 GMT
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 26 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 235 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 100-ஐ தாண்டியது.
Tags:    

Similar News