செய்திகள்
மானூர் அருகே சரள் மண் கடத்தியவர் கைது
மானூர் அருகே சரள் மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
மானூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் கரம்பை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை செய்தனர்.அதில் அனுமதியின்றி சரள் மண் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மேலும் டிராக்டர் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது27) என்பவரை கைது செய்தனர்.