செய்திகள்
கைது

கோவை அருகே கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது

Published On 2021-08-01 10:44 GMT   |   Update On 2021-08-01 10:44 GMT
கோவை அருகே கஞ்சா வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை சாய்பாபாகாலனி போலீசாருக்கு பி.என். புதூர் பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் துடியலூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 54) மற்றும் மதுரையை சேர்ந்த ஜெயவீரன்(53) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News