செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்த கடையின் உரிமையாளர் சிவபாலன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.