செய்திகள்
மலர்ராஜ்

விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-07-31 12:47 GMT   |   Update On 2021-07-31 12:47 GMT
விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரை சேர்ந்தவர் வீரப்பன் மகன் மலர்ராஜ். இவர் மீது விழுப்புரம் பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக மலர்ராஜை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். 

தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் மலர்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து மலர்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News