செய்திகள்
வடமதுரை பகுதியில் மின் வயர் திருடிய 3 பேர் கைது
வடமதுரை பகுதியில் மின்வயர் திருடிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை:
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளன. இரவு நேரங்களில் இங்கு உள்ள மின் மோட்டார் மற்றும் மின்வயர் திருடுபோனது. இது குறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. தனிப்படை அமைத்து கண்காணிக்க உத்தரவிட்டார். போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தாமரைப்பாடி அருகில் உள்ளகோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த அற்புதராஜ் (வயது30), சேர்ந்த ஞானபிரகாசம் (28), ஜோலாரன்ஸ் ஆகியோர் மின் வயர் மற்றும் மோட்டார்கள் திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள மின் வயர்கள் மற்றும் மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.