செய்திகள்
பாளையில் மொபட்டுகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை அரியகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது54). இவர் தனது மொபட்டை மார்க்கெட் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அது திருட்டு போயிருந்தது.
இதே போல் மேலகுளத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ரெட்டியார்பட்டியில் மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அதனை காணவில்லை. இது தொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டுகளை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள்.