செய்திகள்
தற்கொலை

அரவக்குறிச்சி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2021-07-31 09:24 GMT   |   Update On 2021-07-31 09:24 GMT
அரவக்குறிச்சி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி பிரிவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 33). இவர், வாங்கல் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர், தனது மனைவி சந்திராவிடம் அடிக்கடி மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல, நேற்று மாலை மது குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால், கோபத்தில் வெளியே சென்ற பாஸ்கர், வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பாலம் அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News