செய்திகள்
கைது

கொல்லிமலையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2021-07-30 15:00 GMT   |   Update On 2021-07-30 15:00 GMT
கொல்லிமலையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் போலீசார் தேவானூர்நாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரியூர்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகேஷ் (வயது 36), ஜீவானந்தம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் உரிய அனுமதியில்லாத 2 நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, நாகேஷ், ஜீவானந்தத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News