செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரானோ பாதிப்பு -சென்னையில் அதிகரிப்பு

Published On 2021-07-29 16:43 GMT   |   Update On 2021-07-29 16:43 GMT
தமிழகத்தில் இன்று 2145 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 25 லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர்.

2145 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 434 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 21,207 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிய பாதிப்பு 181 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் இன்று 188 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், ஈரோட்டில் 166 பேருக்கும், தஞ்சையில் 102 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Tags:    

Similar News