செய்திகள்
கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2021-07-29 11:25 GMT   |   Update On 2021-07-29 11:25 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள மணப்பாறை அரசு பள்ளியில் 12 ம்வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாட்டி வீட்டிற்கு சென்றதாக கூறிச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சிறுமியின் தாய் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மரவனூரைச் சேர்ந்த பிரசன்னா (வயது 19) என்ற இளைஞர் சிறுமியை அழைத்து சென்றிருப்பதும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரச்சன்னா மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். சிறுமியை திருச்சி காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News