செய்திகள்
கைது

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது

Published On 2021-07-29 02:42 GMT   |   Update On 2021-07-29 02:42 GMT
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 59). இவர், பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, அதை தனக்கு அறிமுகமான 17 வயதான பிளஸ்-2 மாணவியிடம் அடிக்கடி காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து மாணவி தரப்பில், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேந்திரன் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News