செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே சூதாடிய 7 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பெருமாள் (வயது 36), கருப்பசாமி (31), அறிவழகன் (26), பைரவன் (33), நாகராஜன் (33), சூரிய சர்மா (22), சிவப்பிரகாஷ் (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.