செய்திகள்
தற்கொலை

கொரடாச்சேரி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2021-07-28 15:44 GMT   |   Update On 2021-07-28 15:44 GMT
கொரடாச்சேரி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரடாச்சேரி:

கொரடாச்சேரி அருகே உள்ள கீழதிருமதிகுன்னம் நடுத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது70). விவசாயி. இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இவருக்கு குடும்ப பிரச்சினையும் இருந்து வந்தது. இதனால் மனவேதனை அடைந்த கலியமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனால் அவரை குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News