செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா

Published On 2021-07-27 15:03 GMT   |   Update On 2021-07-27 15:03 GMT
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 46,907 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 46 ஆயிரத்து 854 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 46,859 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,907 ஆக அதிகரித்துஉள்ளது.

இந்த நிலையில் நேற்று 89 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 45 ஆயிரத்து 901 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 440 பேர் பலியான நிலையில் 566 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் 3-ம் அலையை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News