செய்திகள்
விபத்து பலி

குளித்தலை அருகே வாகன விபத்தில் 2 பேர் பலி

Published On 2021-07-27 11:09 GMT   |   Update On 2021-07-27 11:09 GMT
குளித்தலை அருகே வாகன விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை:

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவர் திருப்பூரில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கரூர் வழியாக நாகைக்கு வந்து கொண்டிருந்தார். திம்மாச்சிபுரம் புற்று கோவில் அருகே சென்ற போது, எதிரே சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே குளித்தலை தேவஸ்தானத்தை சேர்ந்த மோகன் தனது மனைவியுடன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.

இதில் மோகன், இவரது மனைவி மற்றும் அரவிந்த் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் மற்றும் மோகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக லாலப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News