செய்திகள்
தமிழகத்தில் இன்று 1830 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று 1830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 25 லட்சத்து 44 ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவையில் 177 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 130 பேருக்கும், ஈரோட்டில் 135 பேருக்கும், சேலத்தில் 110 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று 2516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24.86 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று 1830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 25 லட்சத்து 44 ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவையில் 177 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 130 பேருக்கும், ஈரோட்டில் 135 பேருக்கும், சேலத்தில் 110 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று 2516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24.86 லட்சமாக உயர்ந்துள்ளது.