செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே மணல் அள்ளியவர் கைது

Published On 2021-07-23 14:20 GMT   |   Update On 2021-07-23 14:20 GMT
ராமநாதபுரம் அருகே மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை குரூப் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு வாணிவீதி குப்பை ஊருணி அருகில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். வருவாய்த்துறையினர் அங்கு சென்றதும் டிராக்டருடன் மணலை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதனை கைப்பற்றி கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலாந்தரவை அண்ணாநகரை சேர்ந்த குட்டி பூசைத்துரை, இளசு இளையராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதேபோல, ஏந்தல் சுடுகாடு அருகில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனை கண்டு விரைந்து சென்று மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து வாலாந்தரவையை சேர்ந்த மகேந்திரபிரபு(வயது 29) என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரபிரபுவை கைது செய்தனர்.
Tags:    

Similar News