செய்திகள்
விபத்து பலி

வடமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற சிறுமி கார் மோதி பலி

Published On 2021-07-23 13:16 GMT   |   Update On 2021-07-23 13:16 GMT
வடமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற சிறுமி கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

வடமதுரை:

வடமதுரை அருகில் உள்ள தென்னம்பட்டியை சேர்ந்த காணிக்கைராஜ் மகள் நிஷாதேவி(9). 3-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை தென்னம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் சிறுமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு நிஷாதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த எரியோடு குருக்கலையான்பட்டியை சேர்ந்த சக்திவேல்(38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News