செய்திகள்
உடுமலை நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும் தினந்தோறும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் தில்லை நகரில் ரத்னாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகபெருமான், பிரம்மா, துர்க்கை அம்மன், ஆழ்வார்கள், அய்யப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய கடவுள்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பிரதோஷம், கிருத்திகை, மஹாசிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
உடுமலை நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும் தினந்தோறும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், இளநீர், பழரசம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.